Friday, August 27, 2021

நாராயணபுரம்

நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி

புதுச்சேரி, தமிழ் நாடு

August 27, 2021


"பெண்கள் குடும்பத்தின் தூண்டாமணி விளக்குகள். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களிடம் குடும்பத்தின் மீதான பாசமும் பொறுப்பும் இயல்பாகவே பிறந்துவிடும். ஆண்களாகிய நாம் அதை அனுசரித்து நடந்தால் அவர்களுக்கும் நமக்கும் இடையிலுள்ள உறவுப் பாலம் உறுதியாகிவிடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றே முதல் நோக்கமானால் இதைவிடப் பெரிதாக நாம் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை."

"#கொழும்பு வாழ்க்கை சுகமானது தான். ஆனால் அதற்காக வீட்டையும் ஊரையும் வெறுத்து அந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட மாட்டேன். படிக்கவும் வேலைக்கும் எனத் தேடிப் போன இந்த நகரம் எவ்வளவு அழகாகவும் வசதியாகவும் கடற்கரையில் மாலை முழுவதும் காலாற நடக்க இதமாகவும் இருந்தால் அது பிறந்த ஊர் ஆகிவிடுமா? நெருக்கமான நகரத்தின் இடுக்கில் கால் நீட்டிப் படுக்க முடியாத அறையும் நாலடி முற்றமும் வீடாகிவிடுமா? கோடிப் புறத்தில் நிற்கும் ஒற்றைத் தென்னையும் பெயர் தெரியாத பூமரங்களும் தோட்டமாகிவிடுமா?"

No comments:

Post a Comment