நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி
புதுச்சேரி, தமிழ் நாடு
July 27, 2021
தேவன்: "எனக்குச் சங்கீதமெண்டால் நல்ல விருப்பம் என்று அய்யா சொல்லி இருப்பார்."
திலகம்: "ஓமோம், இப்பவும் சங்கீதம் படிக்கப் போறீங்கள் என்றும் சொன்னார்."
தேவன்: "ஓம் அதுவும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்குது. என்ர கூட்டாளி ராமுவும் நானும் அதை இசை என்று சொல்லுவம். எங்களுக்கு அது சும்மா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிற வேலை இல்லை. இசையை எங்கள் உயிருக்குச் சமமாக நேசிக்கிறம்."
"வித்துவானாக வாறதுக்காக நான் இசை பழகயில்லை. பாடுறபோதும் பாட்டைக் கேக்கிறபோதும் என்ர மனதுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். உயர்ந்த இசையைக் கேக்கிறபோது ஆகாயத்தில் மிதப்பதுபோல் இருக்கும். ஆத்மாவோடு பேசுறதுதான் இசை."
திலகம்: "அதென்ன, இந்த மண்டபத்திற்கு வந்தவுடனை உங்களுக்குச் சங்கீதம் நினைவு வந்தது?"
தேவன்: "நல்ல கேள்வி கேட்டாய் போ. இந்த இடத்திலை இருந்து எத்தினையோ பேர் கச்சேரி பண்ணியிருக்கினம். நானும் சின்ன வயசிலையிருந்து நிறைய வித்துவான்களன்ர கச்சேரிகளைக் கேட்டிருக்கிறன். பிரபல வித்வான்களோட நாதஸ்வரக் கச்சேரிகளெல்லாம் கூட இங்கே நடந்திருக்குது. மூண்டு வருசத்துக்கு முந்தி ஒரு பெண் இஞ்சை பாட வந்திருந்தா. அவவன்ர பாட்டும் எனக்குப் பிடிச்சுக்கொண்டுது. பிடித்தமான ஆக்களோட கதைக்க விரும்பிறதும் வழக்கம் தானே. அவவோடையும் கதைச்சுப் பழகினன். அவவன்ர பெயர் தான் நித்யா."
~ *நாராயணபுர*த்தில் @Rajaji Rajagopalan
No comments:
Post a Comment