நாராயணபுரம்: சிவநாதன் பாலகிருஷ்ணர்
Colombo, Sri Lanka/London, United Kingdom
August 9, 2021
நீண்ட காலங்களிற்குப்பின்னர் ஒரு நாவலை முழுமையாக வாசித்த திருப்தி, அதிலும் மற்றைய எழுத்தாளர்கள், எமது தமிழ் கதை எழுத உகந்ததல்ல என்று தமக்குத்தானே தீர்மானம் எடுத்து நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்த ராஜாஜி அவர்களோ மண்வாசனை சிறிதும் குறையாமல் அத்துடன் ரசனையுடன் கையாண்டிருப்பது ஆச்சரியப்படவைக்கிறது. அவர் தவழ்ந்த, வளர்ந்த மண்ணிலேயே நானும் பிறந்து வளர்ந்ததால் அவர் சந்தித்த பாத்திரங்களை நானும் கண்டிருக்கிறேன்.
கதையோட கதையா கதை நடைபெற்ற காலப்பகுதியில் நடந்த “அட்டகாசங்களையெல்லாம்” எவருக்கும் நோகாதபடி கையாண்டது சிறப்பானது.
சொல்வதற்கு மிக அதிகம் உண்டு, சிறப்புகள் பல. ஒரே ஒரு குறை, (சந்திரனில் இருப்பது போலும்) தேவனின் இளவயதில் அவன் கெடுக்கப்பட்ட சம்பவம் அதுவும் ஆசிரியையால். இவை சில வேளைகளில் யாதார்த்தம் எனினும் எங்கோ நெருடலை ஏற்படுத்துகின்றதே!
மற்றபடி…. இம்முயற்சிமிகவும் பாராட்டுக்குரியதே…..!
No comments:
Post a Comment