படித்தோம் சொல்கிறோம் - முருகபூபதி
Main navigation
Saturday, August 28, 2021
ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்: தமிழ்முரசு
Friday, August 27, 2021
நாராயணபுரம்
நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி
புதுச்சேரி, தமிழ் நாடு
August 27, 2021
நாராயணபுரம்
நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி
புதுச்சேரி, தமிழ் நாடு
August 27, 2021
"பெண்கள் குடும்பத்தின் தூண்டாமணி விளக்குகள். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களிடம் குடும்பத்தின் மீதான பாசமும் பொறுப்பும் இயல்பாகவே பிறந்துவிடும். ஆண்களாகிய நாம் அதை அனுசரித்து நடந்தால் அவர்களுக்கும் நமக்கும் இடையிலுள்ள உறவுப் பாலம் உறுதியாகிவிடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றே முதல் நோக்கமானால் இதைவிடப் பெரிதாக நாம் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை."
நாராயணபுரம்
நாராயணபுரம்: சிவநாதன் பாலகிருஷ்ணர்
Colombo, Sri Lanka/London, United Kingdom
August 9, 2021
நாராயணபுரம்
நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி
புதுச்சேரி, தமிழ் நாடு
July 27, 2021
தேவன்: "எனக்குச் சங்கீதமெண்டால் நல்ல விருப்பம் என்று அய்யா சொல்லி இருப்பார்."
நாராயணபுரம்
நாராயணபுரம்: புதுச்சேரி பசுபதி
புதுச்சேரி, தமிழ் நாடு
July 26, 2021
ராஜாஜி ராஜகோபாலன் அவர்களுக்கு ஓர் ஏக்கம் இருந்திருக்கும்போல் உள்ளது. 'கவிதைக் காவிய'மாகத் தன் மூன்றாவது நூலை மாயவன் புகழ்பாடும்படியாக அமைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் போலத் தோன்றுகிறது. இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் நாவலின் முதலாம் பாகத்தில் *எல்லையற்ற பெருவெளி* என்று தொடங்கும் நாவலின் தொடக்கத்தை உட்கொண்ட முதற்பத்தி முதலாக ஐந்தாம் பத்தி முடிய அமைந்துள்ள வண்ணனையைக் காட்டலாம். *தூரத்துச் சவுக்கு மரங்களிலிருந்து சோவென்ற ஓசையுடன் காற்று வந்து வருடிச் செல்கிறது. கையோடு வெண்மணலையும் [அவர் மீது] வீசிவிட்டுச் சிறுபிள்ளை போல் நகைத்தபடி ஓடி ஒளிந்து கொள்கிறது* - *மனதுக்கு எட்டிய தொலைவில் முணுக்முணுக்கென என எரியும் நெய் விளக்கொளியின் ஜொலிப்பில் சக்கர வடிவாகக் கரந்துறையும் மூலவர்* - *தொட்டம் தொட்டமாய் ஒற்றைத் தென்னைகளும் வடலிப் பனைகளும் வானத்தை நோக்கி நீருக்குத் தவம் செய்கின்றன. மண் மேடுகளில் நாவலும் மகிழமும் ஈச்சையும் பாலையுமாக மணற்காடு நெய்தலும் மருதமும் முயங்கிய நிலத்தின் இலக்கிய வடிவமாய் அப்பிரதேசத்தின் தன்மையை பறைசாற்றுகிறது* ~ஆகியவை அவை. 'மணற்காடர்' என்று இவர் புனைந்து கொண்ட பெயருக்கான 'ஏது'வை, இத்திணைநிலத்தின் தன்மைநவிற்சி புலப்படுத்தாநிற்பதை ஓர்பவர் உணர்வர்.
நாராயணபுரம்
நாராயணபுரம்: சுபி நரேந்திரன்
London, England
May 2, 2021
நாராயணபுரம்
நாராயணபுரம்: பாமா இதயகுமார்
British Columbia, Canada
April 19, 2021
மனநிறைவு தந்தது வாசித்து முடித்த திருப்தியும் மகிழ்ச்சியும் கூடவே. திரு. ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் நாராயணபுரம் பற்றி தான் சொல்கிறேன். இதுபோன்று இனிதாவதொன்றில்லை என்று தொடங்கி 416 பக்கங்கள் எங்கள் கண்களை கட்டி அழைத்து சென்று இருக்கிறார் ஆசிரியர்.
நாராயணபுரம்
நாராயணபுரம்: அருந்ததி குணசீலன்
Colombo, Sri Lanka
April 15, 2021








நாராயணபுரம் நாவல்
நாராயணபுரம்: முதல் அறிமுகம்
குப்பிழான் ஐ. சண்முகன்
கரணவாய், கரவெட்டி, இலங்கை
March 2, 2021