Saturday, August 18, 2012

காசி ஆனந்தன் கவிதைகள்

காசி ஆனந்தன்



செருப்பு
ஆண்ட நாள்
அது
என்கிறாய்

சொல்
செருப்பைச்
செய்தவன் 
ஆளும் நாள்
எது?

***

போராளி

செத்தவனுக்காக
அழுதவன்
நீ

இவன்
அழுதவனுக்காக
செத்தவன்

***

இயக்கம்

வைக்காதே சிலை
தொளிலாளிக்கு
எங்கும்
செயலற்று
நின்றதில்லை
இவன்
என்றும்!

***

வல்லாண்மை

பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருப்பவனை
அணுகுண்டு
வைத்திருப்பவன்!

***

No comments:

Post a Comment