காசி ஆனந்தன்
செருப்பு
ஆண்ட நாள்
அது
என்கிறாய்
சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?
***
போராளி
செத்தவனுக்காக
அழுதவன்
நீ
இவன்
அழுதவனுக்காக
செத்தவன்
***
இயக்கம்
வைக்காதே சிலை
தொளிலாளிக்கு
எங்கும்
செயலற்று
நின்றதில்லை
இவன்
என்றும்!
***
வல்லாண்மை
பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருப்பவனை
அணுகுண்டு
வைத்திருப்பவன்!
***


No comments:
Post a Comment